Friday, February 24, 2012

அளவீடுகள்.


அளவீடு
ஒரு பொருளின் பண்புரீதியான அளவுகளை இலக்கங்களின் துணையுடன் எண்ணிக்கை ரீதியாக அல்லது விசேட பதங்களைப்ப பயன்படுத்தி விபரிப்பதாகும். அளவீட்டுப் பண்புகள் இரண்டு வகைப்படும் 
பௌதீகரீதியானது அ) வெளிப்படையானது – நீளம்ää ஆ) கருத்துரீதியானது – நேரடியாக அளவீடு செய்ய முடியாது. 
உளரீதியான பண்பு : நுண்ணறிவுää பாடஅடைவுää விருப்புவெறுப்புää பண்புகள்ää மனப்பாங்கு என்பன. இங்கு எதிர்பாராதது விளைவு பூச்சியமில்லை. 
அளவீடுகளின் வகைகள் 4 
பெயர் அளவிடை : இவ்வெண்கள் பொருள்களை சுட்டிக்காட்டி நிற்கும். தமக்கிடையே எத்தகைய தொடர்பும் அற்றது. (உ-ம்) வீட்;டிலக்கம்ää தொலைபேசி இலக்கம்ää சுட்டிலக்கம்.
வரிசை அளவிடை : தமக்கிடையே உயர்ää தாழ்வு ஒழுங்கை மட்டும் காட்டும். நேர இடைவெளி இல்லை. (உ-ம்) ஓட்டப் போட்டியில் 1ம்ää 2ம் இடங்கள். 
ஆயிடை அளவிடை : தர்க்கரீதியாக அல்லது எதேச்சையாக வரையப்பட்ட பூச்சிய நிலை. சம அளகுகள் அற்றது. (உ-ம்) ண புள்ளிää வெப்பநிலை. 
விகித அளவிடை : ஆயிடை அளவிடை போன்றது. எனினும் சம அலகுகள்ää தனிப்பூச்சியம் என்னும் இயல்புகள் கொண்டது. (உ-ம்) பெரும்பாலான பௌதீக அளவீடுகள். 
மதீப்பீடு : 
பெறப்பட்ட அளவீட்டுக்கு விளக்கமளிப்பதாகும். அளவீட்டின் நோக்கம் மதிப்பீட்டுக்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது. அளவீட்டில் ஏற்படும் வழுக்கல் மதிப்பீட்டைப் பாதிக்கும். ஒரு செயற்பாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் முறையினை செயல் ஒழுங்கு மதிப்பீடு எனலாம். 
மதிப்பீடுச் செயலொழுங்கின் கட்டங்கள்: 
மதிப்பீட்டுக்கு உட்படும் செயற்பாட்டைத் தீர்மானித்தல் 02. அளப்பதற்கான கருவியைத் தெரிவு செய்தல் 03. பெற்ற புள்ளிகளை அளவீடுகளின் மூலம் ஒப்பீடுதல். 04. தீர்மானத்திற்கு வருதல். 
மதிப்பீட்டின் பயன்கள் : மாணவனுக்கு ஒரு ஊக்கியாகவும்ää பின்னுட்டலாகவும் காணப்படும். மாணவனுக்கு வழிகாட்டலுக்கு இட்டுச்செல்லும். 
மாணவரின் கற்றல் விருத்தி பற்றி ஆசிரியர் சரியான தீரமானத்திற்கு வரலாம். பொருத்தமான கற்றல் அணுகுமுறைகளை தெரிவு செய்யலாம். 
கலைத்திட்டம்ää கற்றல்ää கற்பித்தல் நடைமுறைகள்ää கற்பித்தல் உபகரணங்கள்ää கல்வி நிருவாகம்ää முகாமைத்துவ முறைமை போன்றவற்றின் வினைத்திறன்களை நிர்வாகம் கண்டறியலாம். 
மதிப்பீட்டு வகைகள் : 01. நியமம் சார் மதிப்பீடு 02. நியதி சா.ம. 03. கூட்டு சார் ம. 03. அமைப்பு சார் ம. 05. ஆய்ந்தறி சார் ம. 
நியமம் சார்ஃ நியதி மதிப்பீட்டு வேறுபாடுகள். 
நி.ம் : குறித்த மாணவனின் ஃகுழுவின் வெற்றியை ஏனைய மாணவருடன் ஒப்பீட்டு தீர்மானித்தல். 
நி.தி. : கற்றலில் மாணவர்கள் பெறவேண்டிய அடைவ மட்டம் கற்பித்தலுக்கு முன் தீரமானிக்கப்பட்டிருக்கும். 
நி.ம். : கற்றல் இடர்பாடுகளை கண்டறிய மாற்று வழிகளை தீர்மானிக்க உதவும்.
நி.தி. : கற்றல் குறிக்கோள் அடைப்பட்டுள்ளதா என சோதிக்கும். 
நி.ம் : அறிவு விளக்கம் போன்ற வளத்தொழிற்பாடுகளின் அளவீட்டில் இது பயன்படுத்தப்படும். 
நி.தி : குறிப்பிட்ட சில பணிகளில் எத்தகை பாண்டித்தியம் அடைந்துள்ளான் என அறியும் சந்தர்ப்பத்தில் இது பயன்படுத்தப்படும்ää உள இயக்கத்திலும் பயன்படுத்தப்படும். 
கனிப்பீடு : 
கற்பவர்கள் எதிர்பார்த்த அடைவு மட்டத்தை எய்துவதற்கு துணை செய்யும் பொருட்டு அவர்களை அவ்வப்போது மேற்பார்வை செய்து அவர்களின் இயலுமைää இயலாமைகளை கண்டுகொள்ளுதல் ஆகும். இது கற்றல் செயற்பாட்டில் தொடர்ச்சியாக இருக்கும்.    
கனிப்பீடு (அமைப்பு மதிப்பீடு)ää மதிப்பீடு (கூட்டு மதிப்பீடு) வேறுபாடுகள் - 
க – பாடமுடிவில்ஃ அலகு முடிவில் ஃ பாட இடைநடுவில் மேற்கொள்ளப்படும். ம- தவணை ஆண்டுயிறுதிஃ கற்கைநெறி முடிவில் நடாத்தப்படும் பரீட்சை க- மாணவனின் பலம்ää பலவீனத்தை அறியலாம். ம – அளவிடல் அறியமுடியாது. க- உதவி நோக்கம்ää ம – உதவி நோக்கம் இல்லை க- மாணவர் இடர்கனை இனங்கண்டு ஆசிரியர் கற்பித்தல் முறைகளை மாற்ற உதவும். ம- இல்லை.  க- சான்றிதழ் வழங்குதல்ஃ தரப்படுத்தல் நோக்கமில்லை ம- சான்றிதழ் தரப்படுத்தல் நோக்கமுண்டு. க- சமநிலை ஆளுமை விருத்திக்கு உதவும். ம- எழுத்துப்பரீட்சை சமநிலை ஆளுமைக்கு உதவாது.  

தகுதி நிலை காண் அல்லது ஆய்ந்தறி மதிப்பீடு : மாணவனின் குறை நிறைகளை அறிந்து பரிகாரக் கற்பித்தல் நிகழ்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் மதிப்பீடு. 
அளவீட்டுக்கு உட்படுத்தப்படும் பரப்புகள் : 01. அறிதல் ஆட்சிப்பரப்பு : அறிவுää மனப்பாடம்ää கிரகித்தல். 02. உள இயக்கம் சார் ஆட்சிப்பரப்பு : உடல் அசைவுää 03. எழுச்சி ஆட்சி : ஒரு விடயத்தில் இரசனையுடன் செயற்படல். 
அறிதல் ஆட்சிப்பரப்பு : கற்ற விடயத்தை கிரகித்தல்ää பகுப்பாய்தல்ää தொகுப்பாய்வு செய்தல்ää போன்ற உளக்கருமங்கள்ää மற்றும் நுண்ணறிவுää ஆக்கத்திறன் என்பனவும் இதில் அடங்கும். அறிவு ஆட்சி கல்வி நோக்கங்களில் வகைப்படுத்தல். 01. அறிவு – விடயங்கள் கோட்பாடுகள் பற்றிய பொதுவான ஞாபகம்ää 02. கிரகித்தல் - பெற்ற அறிவை விளங்குதல்ää 03. பிரயோகம் - பெற்ற அறிவு சந்தர்ப்பத்தில் பிரயோகித்தல். 04. பகுப்;பாய்வு – கற்றவற்றை சிறு பகுதிகளாகப் பிரித்து அவற்றிக்கு இடையிலான தொடர்பினைக் காணல். 05. தொகுப்பு - இப்பகுதிகளை தொடர்பாக்கி ஒன்றினைத்து புதிய கருத்துக்களை கட்டியெழுப்புதல் 06. மதிப்பீடு – தீர்ப்பு வழங்கள்ää விளக்கமளித்தல்ää விமர்சித்தல்ää 
அறிதல் ஆட்சிப்பரப்பில் அளவிடப்படுபவை : 01. பாடஅடைவு – அடைவுப்பரீட்சைää 02.கற்றல் பின்னடைவு – ஆய்ந்தறி சோதனை 03. நுண்ணறிவு – நுண்பரிட்சை 04. ஆக்கத்திறன்  05. பொது உளச்சார்புää 
அறிதல் ஆட்சிப்பரப்பு அடைவுப்பரீட்சை மூலம் அளவிடப்படும் இதன் வகைகள் :-
அகவயச் சோதனை – கட்டுரை வகைச் சோதனை (உ-ம்) விளக்குகää விபரிக்குகää ஒப்பிடுகää ஆராய்கää விமர்சிக்கää போன்ற பதங்களால் வினவப்படும் வினாக்கள். நன்மைகள் - 01. விடையளிப்பதில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் 02. மாணவர்களின் இயல்புகளை அறியலாம். – விருப்புää வெறுப்புää கவர்ச்சிகள் மனப்பாங்குகள். 03. வினாக்களை தயாரிப்பது இலகுää 04. எல்லாப்பாடங்களிலும் இதனைப்பயன்படுத்தலாம். 05. மாணவனின் மொழிவாற்றலை அறியலாம். தீமைகள் : 01. பாடம் முழுவதையும் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. 02. வினாக்களின் விடையின் தரம் குறையும். 03. புள்ளி வழங்களில் அகவயத்தன்மை 04. ஆழமான அறிவுரையோர் மட்டும் திருத்தலாம். 
தீமைகளை நிவர்த்திக்கும் வழிகள் : குழு முறை மூலம் திருத்துதல்ää புள்ளித்திட்டம் வழங்குதல்ää இருவருவர் ஊடாக பார்வையிடுதல்ää கட்டாயமாக்கப்பட்டு பகுதிää பகுதியாக உடைத்துக் கொடுத்தல்ää 
புறவயச் சோதனை : அ. வழங்கல் வகை – சொற்கள்ää எண்கள்ää குறியீடுகள் ஆ. தெரிதல் வகை – சரி பிழைää பல்தேர்வுää சோடி பொருத்துதல். 

அகவயச் சோதனையில் உள்ள(கட்டுரை வகை) குறைபாடுகளை இது நீக்குகிறது. சிறப்பம்சங்கள் - பரீட்சைகரினால் ஏற்படுத்தப்படும் புள்ளி வேறுபாட்டை இது குறித்து நிற்கிறதுää அதிக நம்பகத்தன்மை கொண்டது.ää எதனை அளவிட முடிகிறது அதனை அளவிட முடியும்.ää புள்ளியிடல் இழக்கு தீமைகள் - அனுமானம் செய்து விடையளித்தல்ää வினாக்களைத் தயாரிப்பது கடினம். மாணவனின் மொழியாற்றல்ää வாதத்திறன்ää ஆக்கத்திறன்ää அளக்கப்படுவதில்லை. 
வழங்கல் வகை : சரியான சுருக்கமான துலங்களை மட்டும் எதிர்பார்க்கும். இந்த வினாக்களுக்கு ஒரு விடை மட்டும் காணப்படும். (உ-ம்) இலங்கையின் தலை நகரம் …… ஆகும். 02.  தெரிதல் வகை – சரி பிழை – ஒரு வினாவைக் கேட்டு அது சரியா பிழையா எனத்துலங்கும் படி மாணவர் எதிர்பார்க்கப்படுவர். பல்தேர்வு வினா – தரப்பட்டுள்ள விடைகளுள் சரியான விடையைத் தெரிவு செய்வது எதிர்பார்க்கப்படுகிறது. – சோடி பொருத்துதல்ää பல்வேறு தேர்வு வினாக்களின் விரிவுபடுத்திய அமைப்பாகும். (உ-ம்) தொடுத்தல். 
எழுச்சி சார் ஆட்சிப்பரப்;பு : 
கற்றலின் விளைவாக ஒரிவரில் ஏற்படும் புதிய மனப்பாங்குகள் இரசனைகள் விருப்பங்கள்ää நம்பிக்கைகள் பெறுமானங்கள் பின்பற்றல்கள்ää சமூக இணைப்புகள்ää என்பன இதில் அடங்கும். 
வகுப்பறைக் கற்பித்தலில் இதனை அளவிடுவது சிரமம். ஆசிரியருக்கும்ää அளவிடுவது சிரமம். எழுச்சிசார் ஆட்சிப் பரப்புகள் - ஊசயவாறயடட 
ஏற்றல்ää 02. துலங்குதல் 03. பெறுமதியளித்தல்ää 04. ஒழுங்கமைத்தல் 05. இயபுபடுத்தல் 
எழுச்சி ஆட்சி கனிப்பீட்டு நுணுக்கங்கள் : 01. அவதானிப்புப்பத்திரம்ஃ அட்டவணை 02. செவ்வைபார்க்கும் பட்டியல் 03. தர அளவுச்சட்டம் 04. நேர்காணல் 05. உற்று நோக்கல் 
அவதானிப்புப்பத்திரம் - மாணவரின் மனவெழுச்சியை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படும் முக்கிய மதிப்பீட்டுக் கருவி. இது மாணவர் வெளிக்காட்டும் குணவியல்புகளை உள்ளடக்கி இருக்கும். வெளிக்காட்டப்படும் தகவல்களை வரவுக்குறி இடப்படும். பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் - மாணவன் செயற்பாட்டில் ஈடுபடும் போதுää மாணவன் கற்றலில் ஈடுபடும் போதுää இயற்கையான சந்தர்ப்பங்களின் போது. செவவை பார்க்கும் பட்டியல்- ஒரு மாணவன் குறித்த செயலொன்றில் ஈடுபடும் போது வெளிக்காட்ப்படும் என எதிரபார்க்கும் நடத்தை அவனிடம் வெளிக்காட்டப்படுகின்றதா? இல்லையா என்பதை வினவிப்பார்ப்பயன்படுத்தப்படும் கருவியாகும். இது உளவியக்க செயற்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றது. (உ-ம்) சமைத்தல் 
செயற்பாட்டுப்பட்டியல் தயாரிக்கப்டும் முறைகள் - குறித்த கற்றல் நிகழ்ச்சியை இனங்காணல்ää அந்நிகழ்ச்சிக்குறிய தொழிற்பாட்டை பகுதிää பகுதியாக வசனத்தில் எழுதுதல்ää நிகழ்ச்சியை ஒழுங்குமுறையில் எழுதுதல். 
தர அளவுச்சட்டம் : ஒரு இயல்பில் தாழ்நிலையை ஒரு முனையாகவும்ää அதன் உயர் நிலையை மறுமுனையாகவும் கொண்டு இயல்பின் பல்வேறு நிலைகளைப் புலப்படுத்தும் ஒரு தொடரகம். 

உளவியக்க ஆட்சி : ஒருவருள் ஏற்படும் உடல் விருத்தியின் அடிப்படையில் தமது உடலை தமக்குத் தேவையான படி கையாள்வதும் கருவிகள் உபயோகிப்பதில் ஆற்றல்களின் விருத்தியுமாகும். 
உளவியக்கஆட்சியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் : ஒருவரின் அறிவு அனுபவம்ää உளக்குறிப்புää உளப்பலம்ää உடல்நிலைää தசைநார்கள் நிகழ்ச்சி அளவுஆற்றல்.
உ.இ.ஆட்சி பாடசாலையில் உள்ள பாடங்கள் : உடல்கல்விää மனையியல்ää கைவேலைää தையல்ää விவசாயம்ää உலோகவியல்ää மரவேலைää வாழ்க்கைத்திறன் கணினி. 
அளவீடுகருவிகளின் இயல்புகள் : நம்பகம்ää தகுதி ஒரு தான் அளவிடும் விடயத்தை எந்தளவுக்கு திருத்தமாகத் தருகிறதோ அதனை நம்பகம் எனலாம். நம்பகத்தை துனிதல்- 01. சோதனைஃ மறு சோதனை: முதல் பரீட்சை வைத்து புள்ளி வழங்கப்படும் குறித்த கால இடைவெளியின் பின் அதே சோதனை நடாத்தி குறித்த புள்ளிகளுக்கிடையே இணைவுக்குணகம் காணப்படும். இது உறுதிக்குணகம் எனப்படும்.  02. சமவலு அமைப்பு முறை : சமவலுவான இரண்டு சோதனைகள் வைக்கப்படும். அ. கால இடைவெளயின்றி வதை;தல்ää ஆ. காலஇடைவெளயுடன் வைத்தல். பெறப்படும் புள்ளிகளுக்கு இணைவுக்குணகம்ää இது நம்பகக் குணகம்ää உறுதிக் குணகம் எனப்படும.;  03. இரு பாதி முறை 04. கூடர் ரிச்டர்.
நம்பகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் :  1. சோதனையின் நீளம்ää 2. உடல்ää உள நிலைää 3. புள்ளிவழங்களில் குறைபாடு. 4. சோனைக்குழுவின் ஆற்றல்ää 5. சோதனையின் கடினத்தன்மை. ஒன்றில் ஓன்று தங்கியிருக்கும் வினாக்கள்.
தகுதி : அளவீட்டிக் கருவியின் மிகப்பிரதான இயல்புகளில் ஓன்றாகும் சோதனை எதனை அளவிடுகின்றதோ அதனை அந்நளவற்கு அளக்கிறது என்பதைப்பற்றிக் குறிப்பிடுகிறது. சோதனை மேற்கொள்ளும்ää முறையின் அடிப்படையில் வகைப்பபடுத்தல். அ. உளளடக்கத் தகுதி : குறிப்பிட்ட பாடப்பபரப்பில்ää மாணவனின் தற்போதயை நிலை எந்தளவில் உள்ளதென்று அறிந்து கொள்ளுதல். நோக்கமாயின் இங்கு அச்சோதனையின் உள்ளடக்க தகுதி கருத்திற்கொள்ளப்படும். ஒரு பகுப்பாய்வின் ஊடாக சோதனை உருப்படிகள் பகுப்பாய்வு செய்யப்படும். (பாடத்திட்டம்ää பாடநூல்ää கைநூல் என்பன விரிவாக ஆராயப்படும். இங்கு விடயத்திறன் அட்டவணை பயன்படுத்தப்படும். ஆ. அமைப்புத் தகுதி: குறித்த சில உள அமைப்புக்கள் கூறுகளைஃ ஒரு சோதனையானது எந்தளவிற்கு அளவிடுகின்றது என்பதை குறிப்பிடுவதாகும். (உ-ம்) நுண்மதிää மொழியாற்றல்ää விரிவாக எழுதுதல். ...   இ.முன்னறி தகுதி  ஈ. உடன்பெறு தகுதிää 
நீல அட்டவணை/ விடையத்திறன் அட்டவணை டீடரந Pசiவெ :இது வினாப்பத்திரத்தின் தன்மையை தெளிவாகக் கூறக்கூடியது. வினாப்பத்திரத்தில் இடம்பெறும்ää வினாக்களின் எண்ணிக்கைää பாடப்பகுதிகள்ää ஒவ்வொரு அலகிலும் எடுக்கப்படும் வினாக்களின் எண்ணிக்கைää புள்ளிகள்ää பாடம். இது நிரல்களும்ää நிரைகளும் கொண்டு ஒரு இருவழி அட்டவனையாகக் காணப்படும். நம்பகத்தன்மைää தகுதியுமான வினாப்பத்திரத்தை தயாரிக்க இது உதவும்.  
பகுப்பாய்வு : மாணவர் பெறும் புள்ளிகளை ஒரு ஓழுங்கமைப்புக்குட்படுத்தி பகுப்பாய்வு செய்வதால்ää அடை தொடர்பான பண்புகளை தெளிவாக விளங்கலாம். புள்ளிகள் பரம்பியுள்ள விதத்தை அறிய அவற்றை வரிசைப்படுத்தல்ää அட்டவணைப்படுத்தல்ää வரைபுகளில் தெளிவாகக் காட்டலாம். பகுப்பாய்வின் நண்மைகள் ; ஆசிரியர் மதிப்பிட்டுச் செயலை வெள்ளிகரமாக நிறைவேற்ற உதவும். புள்ளிகளை ஒப்பிட்டு தீரமாணம் மேற்கொள்ள உதவுகிறது. 
மைநிலை அளவீடு : ஒரு நிகழ்வுதொடர்பான பரம்பரை மையத்தினை காட்டுவதற்கு பொருத்தமான மையத்திற்கு அண்மையான அளவீடுகள் ஆகும். – (உ-ம்) 1.ஆகாரம்;ää 2.இடையம:; ஏறுவரிசையில் நடுவில் வரும்புள்ளியாகும்ää 3. இடை : சராசரிஃகூட்டல் இடை சிறந்தது. வகுப்பாயிடை ஒன்று உருவாக்கல் : 1. வீச்சம் கணித்தல்: அதிஉயர் புள்ளி – அதிகுறைந்நத புள்ளி 101ää 2. வகுப்பா இடைகளின் எண்ணிக்கை:  வீச்சம்ஃவகுப்பாயிடையின் பருமன்.(i)  ழுபுஐஏநு வளையின் பயன்கள்(சதவீத திறள்மீடிறன் வளையி)  : மாணவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு அதாவது அடைநிலையை அறிந்து கொள்ள. இருசோதனைகளின் செயலடைவுகளை ஒப்பிட. மாணவர்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண. சிதறளின் அளவைகள் 1. வீச்சு. 2. இடையின் விலகல்ää 3. நியம விலகல: சிதரள் தொடர்பான அளவீடுகளில் மிகவும் பயன்மிக்கது. . 4. கால்மாண் வீச்சு. 
சதமாணம் Pநசஉநவெடைந  அளவீட்டுத் தொகுதியை ஏறுவரிசைப்படுத்திய பின் குறைந்த அளவீட்டிலிருந்து யாதாயினும் நூற்றுவீதத்தில் கணிக்கப்படும் அளவீடாகும். காலணை வீச்சு ஸ்ரீ ஞ3-ஞ1 அரை இடை காலணிவீச்சு ஸ்ரீ (ஞ3-ஞ1) ஃ2 இணைவு : யாதானும் குழுவிற்குரிய மாறிகள் இரண்டும்முறிய நடைத்தைக் கோலத்தில் உள்ள தொடர்பைக்குறிக்கும். தொடர்பை இரண்டு வழகளில் காட்டலாம்ää சிதறல் புள்ளி வரைபு ääகணிப்பு(இணைவுக்குணகம்ää - (பியசன்ää ஸ்பியமன்) இணைவுகள் இரண்டு வகை: நேர் இணைவுää எதிர் இணைவு : ஒரு தொகுதியிலுள்ள ஒரு மாறி அதிகரிக்கும் போது மற்றைய மாறியும் அதிகரித்தல். இணைவு குணகத்தின் வீச்சம் -1 தொடக்கம் 101இ 101ல் பூரண நேர் இணைவு -1 பூரண எதிர் இணைவுää பூச்சியம் தொடர்பு இல்லை. 
செவ்வன் நிகழ்தகவு வளையியின் இயல்புகள் 1. ஆலயமணி வடிவானது. 2. இப்பரம்பரையில் அமைந்துள்ள புள்ளிகளில் ஆகாரம்ää இடையம்ää இடை என்பன ஒரேபெறுமதியாக இருக்கும். 3. இடைää இடையம்ää ஆகாரம் என்பவற்றின் இருபக்கமும் சமனான பரப்பைக் கொண்டது.  4. வரைபின் இரு அந்தத்திலும் குறைந்த பெறுமானமும்; மத்திய பகுதியில் புள்ளிகளின் தொகை அதிகமாகவும் இருக்கும். 
கூட்டலிடைக்கும்ää புள்ளிகளின் விலகலுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கூட்டலிடையின் வலமாகவும்ää இடமாகவும் மூன்று நியமவிலகல் காணப்படும். வளையியின் கிடையச்சுடனான பரப்புää ஆட்களின் ஆட்களின் எண்ணிக்கைக் காட்டும். யாதாயினும் ஒரு மூலப்புள்ளி செவ்வன் புள்ளிக்கு மாற்றப்படுமாயின் அது ணுபுள்ளி எனப்படும். 
உருப்படி பகுப்பாய்வு : சோதனை இடம்பெறும் வினாக்களின் விடைகளை பகுப்பாய்வு செய்வதன் ஊடாக தீரமானிக்கப்படும். கட்டுரை அமைப்பிலுள்ள வினாக்களின் நம்பகத்தன்மை குறைவினால் மிக அரிதாக பயன்படுத்தப்படுகின்றது. புறவயச் சோதனையுள்ள வினாக்கல் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.  சோதனையின் உருப்படிகள் 2 பண்புகளைக் கொண்டது. ஐ.கடினத்திறன்: வினாக்கல் மாணவர்களின் மட்டத்திற்கேற்ப கடினமட்டத்திழல் இருத்தல் வேண்டும் இவ்வாறு கடினமட்டத்தை விளக்குவது கடினப்பெறுமானமாகும். அல்லது கடினச்சுட்டியாகும். கடினச்சுட்டிஸ்ரீ சரியான விடையளித்தோர் ஃசோதனைக்கு தோற்றியோர். ஐஐ.பிரித்தறி திறன் : திறமை கூடுதலாக உள்ள மாணவனை திறமை குறைவாக உள்ள மாணவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது. பிரித்தறி திறனாகும்.  உருப்படி பகுப்பாய்வின் பயன்கள் : தயாரிக்கப்பட்ட சோதனை மதிப்;பீடு செய்தல். 2. மாணவர்களின் அடைவின் குறைநிறைகளை கண்டுபிடித்தல் 

Micall Scale  =  Z40 X 10 + 50
Hall Scale = Z40 X 14 + 50



வழிகாட்டல் ஆலோசனை வழங்களின் அறிமுகம் :

வழிகாட்டல் ஆலோசனை வழங்களின் அறிமுகம் : 
முற்காலத்தில் மனதை அமைதிப்படுத்தவும்ää கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தையை விரித்தி செய்யவும் குறிப்பிடப்பட்ட நுட்பஙகள் நிலவின. அக்கால வாழ்க்கை முறை இலகுவாகவும் கற்கும் மாணவர் தொகை குறைவாகவும் ஆலோசனை சேவை இலகுவாகவும் இருந்தது. ஆசிரியர்ää பெற்றோர்ää மதகுருக்கள் மூலம் இத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. 19ம் நூற்றாண்டு கைத்தொழில் புரட்சிää சனத்தொகை கட்டமைப்பு மாற்றம்ää சமூக பொருளாதார மாற்றம் காரணமாக சிக்கலான சமூதாயம் தோன்றியது. இதனால் வழிகாட்டல் ஆலோசனைக்கான தேவை ஏற்பட்டது. 20ம் நூற்றாண்டு ஆரம்பம் குசயடெம Pநசளழn 1908ல் பொஸ்டன் நகரில் தொழில் தெரிவு வழிகாட்டல் நிலையத்தை ஆரம்பித்தார்.
இவரின் கருத்துப்படி வழிகாட்டல் என்பது ஒரு தொழிலைத் தெரிந்து கொள்ள வழிகாட்டுவது ட்ரூமன் ஹெலி – 1944 மாணவனை பாடசாலையுடன் பொருத்தப்பாடைச் செய்வதற்கும் கல்வித்துறையினை தேர்தெடுக்கவும் செய்யும் உதவியாகும். பிற்காலத்தில் வழிகாட்டல் ஆலோசனை எண்ணக்கரு இத்துறையில் உட்சாகம் காட்டிய தத்துவவியலாளர்கள் மூலம் வளர்ந்தது. ஆலோசனை என்பது மிகவும் செலுமையான வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை பெற உதவும் ஒரு சிகிச்சை முறையாகும். ஆலோசனை என்பது ஆலோசனை நாடி தனது பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆலோசகரை நேர்முகமாகச் சந்தித்து கலந்துரையாடி அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகளை தீர்த்துக் கொள்வதாகும்.
ஆலோசனை நோக்கம்: 1. தனியாள் விருத்தி 2. பிரச்சினைகள் வருமுன் தவிர்த்தல் 3. பிரச்சினைக்கு தீர்வு காணல். 4. பொருத்தப்பாடுகளைக் காண உதவி வழங்கல். கால் ஆர் றோஜஸ் - ஒருவருக்கு அவரைப்பற்றிய சுயவிளக்கத்தை ஏற்படுத்தி அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக்கொள்ள வழங்கப்படும் உதவி ஆலோசனையாகும்.
வழிகாட்டல் என்பது: வாழ்க்கையில் சகல சந்தந்ர்ப்பங்களிலும்ää எல்லாப்பருவங்களிலும் சூழலுடன் இயல்பாக்கம் காணவும் சுயதிறன்களை விருத்தி செய்யவும் பொருத்தமான தெரிவுகள் செய்யவும்ää தீர்மானங்களை மேற்கொள்ளவும் உலவியல் அனுகுமுறை அடிப்படையில் பயிற்சி பெற்றவர்களால் வழங்கப்படும் உதவியாகும். ளு.மொறிஷன் - எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு அளிக்கப்படும் உதவி வழிகாட்டல் ஆகும்.
வழிகாட்டலில் நான்கு விடயங்கள் கருத்திற்கொள்ளப்படும். 1. தன்னைத்தானே உணர சுயவிளக்தை ஏற்படுத்தல்ää 2. யாதாத்த சூழலுக்கேற்ப இயைபாக்கம் காணல். 3. நிகழ்காலää எதிர்கால நிலமைகளுக்கு ஏற்ப தன்னை இசைவுபடுத்திக் கொள்ளல். 4. சுயதிறன்களை வெளிக்கொணர்ந்து அவற்றை முழுமையாக விருத்தி செய்தல்.  
பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசனை சேவையின் தேவை: பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை தேவை என்பது ஆசிரியர்ää அதிபர்ää பயிற்றப்பட்ட ஆலோசகர் ஆகியோரால் ஒரு மாணவன் மனநிறைவும்ää சமூகப்பொருத்தப்பாடும் பெற்று தன் ஆற்றல்களை உச்சநிலையை அடைவதற்கு குறிப்பாக அவனது இளமைப்பருவத்தில் வழங்கப்படும் உதவியாகும். புராதான காலங்களில் இச்சேவை இன்று போல் தேவைப்படவில்லை. விஞ்ஞானதொழில்நுட்பம் மாற்றம்ää சனத்தொகைப்பெருக்கம்;ää நகரங்களுக்கான இடபெயர்வுää பொதுசனத்தொடர்பு விரிவாக்கம்ää கலாசார மாற்றம்ää காலவதியாகும் அறிவுத்திறன் ஆகியவற்றால் வாழ்க்கை முறை சிக்கலடைகிறது. இதற்கமைய பெற்றோரும்ää முதியோரும் வழிகாட்ட போது போதிய அறிவு பெற்றிராததால் குடும்ப அமைப்பு சீர்குழைகிறது. மேலும் கல்வி கற்போர் தொகை அதிகரிப்புää கற்கை நெறித்தெரிவுää தொழிற்துறை என்பனவும் பெருமளவு விருத்தியடடைந்தமையால் பாடசாலைகளில் இச்சேவையின் தேவை அவசியம்.
வழிகாட்டல் ஆலோசனைத் தேவைக்கான காரணங்கள் : 01. குடும்ப அமைப்பு பலயீனமடைதல் 2. சமூக கலாசார மாற்றம் 3. அறநெறிää மனிதவிழுமியங்களின் செல்வாக்கு அருகிவருதல். 4. உள்ளுர் யுத்தம்ää இயற்கை அனர்த்தம்ää 5. கற்கை நெறிசார்பான தேவைகள் 6. தொழில் வாழ்க்கைக்கான வழிகாட்டலின் தேவை. இக்காரணிகள் மாணவர்களின் கல்வி முற்றேத்தை பாதிக்கின்றது. இலங்கை கல்வி வரலாற்றில் 1940ற்கு முன் இச்சேவை இடபெறவில்லை. 1960ல் கல்வியியலாளர் இச்சேவை பாடசாலைகளில் தேவையென அறிக்கையிட்டனர். 1981ல் கல்வி வெள்ளை அறிக்கையில் 34-50 ஆம் பந்திகளில் இதன் முக்கியத்துவம் கூறப்படுகின்றது. 1982ல் தயாவுல் மித்ரோ எனும் ஆலோசனை சேவை நிலையங்கள் 26 பாடசாலைகளில் உருவாக்கப்பட்டன.
ஆலோசனைப்பணியின் பிரதான பரப்புகள் : 1. உளவியல்சார் 2. கல்விசார் 3. தொழில்சார் 4. குடும்பம் சார் ஆலோசனைகள்.
ஐ.உளவியல் சார் ஆலோசனைகள்: பதற்றம்ää அளவுக்கதிகமான மன அழுத்தம்ää போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு ஆலோசனை வழங்கல். ஒருவர் தன்னதை; தான் நன்கு விளங்கிக்கொள்ளவும்ää தனது பலத்தையும் பலவீனத்தையும் புரிந்து கொள்ளவும் ஒருவருக்கு உதவி செய்வது இதன் முக்கிய தொழிற்பாடாகும். இது ஒருவரது உளவியல் தேவைகளை திருப்திப்படுத்துவதன் மூலம் சாதகமான உள ஆரோக்கியத்தை பேணச் செய்யும் உதவியாகும்.
ஐஐ.கல்விசார் ஆலோசனை வழங்கல்: மாணவர்களின் கல்வி தொடர்பான இலக்குகளை அமைத்துக்கொள்ள உதவுகிறது. மாணவரது உளச்சார்புää திறன்கள்ää நாட்டங்கள்ää மனப்பாங்குகள்ää அடைவுகள் என்பன தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிப்பதும் அறிக்கைகளைப் பேணுவதும் இதன் முக்கிய பணியாகும். இங்கு 2 அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் 1. கற்றல்சார் அடைவுகளில் மாணவர்களது வினைத்திறனை ஏற்படுத்தல். ஏற்கனவே திருப்திகரமாக கற்றுக்கொண்டிருக்கும் மாணவனை மேலும் சிறப்பாகச் செயற்பட ஆலோசனை வழங்கப்படுகின்றது. 2. தெரிவு செய்யதலை திட்டமிடுவதற்கு உதவகிறது. ஒரு மாணவன் எப்பாட நெறியைää எந்த நிகழ்ச்சித்திட்டத்தை தெரிவு செய்வதற்கு உதவுகிறது.
ஐஐஐ. தொழில்சார் ஆலோசனை: இது கல்வி ஆலோசனை வழிகாட்டலின் தொடர்ச்சியாகும். இதில் ஒருவரது சொந்தத் திறன்ககள் நாட்டங்களை அடையாளம் காணவும்ää மதிப்பிடவும் உதவி வழங்கப்படுகின்றது. தொழில்வாய்ப்புக்கள் அவற்றிக்கான தகுதிகள் தொழில் நாடியிடம் இருக்கவேண்டிய ஆற்றல்கள்ää திறன்கள்ää ஆளுமைப்பண்புகளை வழங்குவதும் இதில் அடங்கும். ஆலோசனை நாடி தான் எதிர்பார்க்கும் இலக்குகளை எய்துவதற்கும் தமது திறமைகளை வினைத்திறனுடன் பயன்படுத்தவும் ஆலோசகர் உதவுவார்.
ஐஏ. குடும்ப ஆலோசனை :  ஒருவர் குடும்பத்தின் அங்கத்தவர் என்றமுறையில் தனது கடமைகளையும் பொருப்புக்களையும் உரியமுறையில் நிறைவேற்றி வாழ்க்கையை வெற்றிகரமாகவும் திருப்தியாகவும் கொண்டு செல்ல உதவும் செயல்முறையாகும். இது பின்வரும் சந்தர்ப்பங்களுக்கு உதவும். மது அருந்துவதால் ஏற்படும் விரக்திää பதட்டம்ää உளக்குழப்பங்களிலிருந்து விடுதலை பெற. வெற்றிகரமில்லா குடும்பவாழ்க்கையை மீளமைக்க. வெற்றிகரமான குடும்ப வாழ்வில் ஏற்படும் அச்சறுத்தலைத் தவிர்க்க. கட்டிழமைப்பருவத்தினர்ää இளம் தம்பதிகள் போன்றோரின் திருப்தியான வாழ்வுக்காக அறிவுää திறன்ää மனப்பாங்குகளை வழங்கல்.
குறிப்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனை வழங்கல் : 1.மனவெழுச்சிää அதிர்ச்சிக்கான 2. துயருற்றோருக்கான 3. முதியோருக்கான 4.புற்று நோய்ää எய்ட்ஸ் 5. போதைப்பொருள் ஆலோசனைகள்.
பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசனை தேவையை உருவாக்கிய காரணிகள் :
1.         நாடுகளின் சமூகப்பொருளாதார கட்டமைப்பு மாற்றங்கள். இவை குடும்ப வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகமாற்றம் காரணமாக மனித உறவுகள் சிக்கலடைந்தன. தனிமைää குறைவான ஓய்வுää சமூகமாற்றங்களின் வேகம்ää பாராமரிய ஆதரவு அற்றுப் போனமைää விழுமியங்கள் முரண்படக் காரணமானவையால் இத்தேவை ஏற்பட்டது.
2.         அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சிறுவர்கள் தனிப்பெற்றோருடன் வாழ்தல்ää வேலையின்மைää தீராத நோய்ää வீட்டு வசதிகள்ää வறுமைää போதிய பாராமரிப்பின்மை போன்றவற்றிக்கு எதிராக போராட வேண்டியமையால் வழிகாட்;டல் ஆலோசனை அவசியம்.
3.         பாடசாலை கட்டமைப்புää ஒழுங்கமைப்பு மாற்றம். பரீட்சை அடிப்படைக்கொண்ட சிக்கலான கலைத்திட்டம்ää பாடசாலை உள்ளும் வெளயிலுமான போட்டி
4.         மாணவர்களை எதிர்கால உலகிற்கு தயார்படுத்த.
ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனையின் தேவை: 1. தாம் எதிர்நோக்கும் பிரச்;சினைகளை எதிர்கொள்ளவும்ää சிக்கலான சமூகமாற்றங்களுக்கு முகம்கொடுக்கவும். 2. குடும்பத்தில் சிறுவர்களுக்கு போதிய கவனிப்பு வழங்கப்படாமை. இதற்கான காரணிகள் - தாய்ää தகப்பன்ää இருவரும் வெளிநாடு செல்லுதல். தாய்- தகப்பன் கைவிடல். தாய-தகப்பன் குடும்பப்பிரச்சினை 3. உடல்ää அறிவுää மனவெழுச்சிää சமூகவிருத்தி சார் ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கு. 4. ஆரம்பப்பாடசாலை மட்டத்தில் வாசித்தல்ää எழுதுதல்ää கணித எண்ணக்கருக்களில் காணப்படும் கற்றல் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்குவதற்கு 5. உடலியல் ரீதியான தடங்கள் குறைபாடுகளை அடையாளம் கண்டு பொருத்தமான சிகிச்சை வழங்க. 6. மீற்திறன் மாணவர்களுக்கான விசேட நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த.
இடைநிலைமட்ட பாடசாலை முறைமையில் வழிகாட்டல் ஆலோசனையை உருவாக்கிய காரணிகள் :
1.         குடும்ப சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் : குடும்பத்தகராறுää பெற்றோர் பிரிதல்ää பெற்றோர் (தாய்மார் வெளிநாடு செல்லல்) குடும்பத்தின் குறைந்த சமூகப்பொருளாதார நிலை போன்ற காரணங்களால் குடும்பசூழ்நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது.
            இதனால் பின்வரும் விளைவுகள் ஏற்படும். அ. பெற்றோர் பிள்ளை புரிந்துணர்வின்மை. ஆ. பிள்ளைகளுக்கு போதியளவு அன்புää பாசம் கிடைக்கப்பெறாமை. இ. பெற்றோர்ää பிள்ளைகளை கவனிக்காமை. இந்நிலையில் பிள்ளைகளின் பிரச்சினைத் தீர்க்க பெற்றோரால் போதிய நேரம் எடுக்க ஒதுக்க முடியாது. இத்தகைய சந்;தர்ப்பங்களில் தம்பிரச்சினைகளை தம்மால் தீர்க்க முடியாத போது வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படுகின்றது.
2.         விரும்பத்தக்க பொருத்தமப்பாடான நடத்தையை விருத்தி செய்வதற்கு பாரம்பரிய சமூதாயத்தில் வழங்கப்பட்டு வந்த ஆதாரவின்மை : மிகையான வண்நடத்தைää சகமாணவருடன் முரண்படல்ää சமூக இலிää அதீத பயம்ää பாடசாலை சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தப்பாடடைவதில் பிரச்சினைää போதைவஸ்துப்பிரச்சினை போன்ற பிரச்சினைகளால் வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படுகின்றது. மாணவரின் இவ்விரும்பத்தகாத நடத்தைகளை விடுவிப்பதற்கும்ää வழிகாட்டல் ஆலோசனை அவசியம்.
3.         கட்டிலமைப்பருவ மாற்றம் : இந்த வயதில் உடல்ரீதியான மாற்றங்கள் சம்பந்தமான கவலைகள் பயன்கள் என்பவற்றைப் போக்குவதற்கு. இப்பருவ வளர்ச்சியுடன் தொடர்பான பாலியல் ரீதியான தகவல்களை வழங்குவதற்கு. எதிர்பாராலார் பற்றிய மனப்பாங்கை விருத்தி செய்வதற்கு மேலும்ää இவ்வயதில் ஏற்படும் கோபம்ää பயம்ää விரக்திää பதட்டம் ஆகிய உணர்வுகளால் ஏற்படும் மனவெழுச்சியைக் கட்டுப்படுத்த உதவும்.
4.         பாடசாலை சிக்கல்கள் அதிகரித்தமை. பரீட்சை முக்கியத்துவம் வாய்ந்த கல்வி என்பதால் மாணவர் உயர்ந்த அடைவுமட்டத்தை அடை எதிர்பார்ப்பர். பாடசாலை முடிந்த பின் தனியார் வகுப்பில் நாட்டம். இதனால் ஓய்வின்மைää பதட்டம்ää பயன் தோன்றுகிறது.  வேலை உலகில் மாற்றம் காரணமாக கலைத்திட்டத்தில் மாற்றம். இம்மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றி அமைப்பது மாணவர்களுக்குச் சிரமம். சிக்கலான கலைத்திட்டம் பெற்றோருக்கும் மாணவருக்கும் மன அழுத்தம்ää பதட்டம் என்பன உண்டாகின்றது. மனவழுத்தம் மாணவர் செயற்பாட்டில் விரும்பத்தாகாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கற்பத்ற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. பாடசாலை ஆலோசகர் மாணவரின் மன அழுத்தத்தை வெற்றி கொள்ள உதவுவார். பாடசாலை முறையில் ஏற்படும் சிக்கல் ஆரம்ப இடைநிலை மட்ட மாணவர் தம் கற்றல் சார் செயல்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல ஒழுங்கான உதவிகள்ää ஆதரவு தேவை. இதனை பாடசாலை ஆலோசகர் வழங்க மாணவர் கற்றல் திறன்பற்றிய தகவல்கள்ää அடைவுகள்ää பொருதாhர உதவிää சமூகபங்குகள் போன்ற மாணவர் சொந்தப்புள்ளி விபரங்கள் பாடசாலை மட்டத்தில் சேகரித்து பாதுகாத்து கற்றல் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு குறைகாண் சோதனைகளை வழங்கி அவற்றின் முடிவுகளைப் பயன்படுத்தி மாணவர் கல்விசார் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசகர் உதவுவார்.
ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல்களின் அவசியம்.
இவை இரண்டு பிரிவுக்குள் அடங்கும். 1. பிள்ளையின் விருத்தியில் சாதகமான முறையில் செயற்பட பெற்றோருடன் தொடர்புபடல் :இதன் மூலம் பின்வரும் விடயங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அ. தாய்-தகப்பினிடையே சுமுகமான உறவைத் தாபித்தல். ஆ. பிள்ளைகளுக்கு சமபோசாக்குள்ள உணவுகளை வழங்கச் செய்தல். இ. பிள்ளைகளை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்பச் செய்தல். ஈ. பாடசாலை பின் பிள்ளைகள் எவ்வாறு தமது நேரத்தை கழிப்பதென தீர்மானித்தல்.   2. விருத்திசார் தேவைகளை மேற்கொள்ள பிள்ளைகளுடன் நேரடியாக தொடர்புடல். கீழ்குறிப்பிடப்படும் பிர்ச்சினை தீர்ப்பதற்கு மாணவர்களுடன் தொடர்புற வேண்டியுள்ளது. அ. கற்றல் இடர்பாடுகள்ää குறைபாடுகள்ää ஆ. பார்த்தல்ää கேட்டல்ää பேச்சுக்குறைபாடுள்ள பிள்ளைகள் எதிர்நோக்கும் பிர்ச்சினைகள். இ. பாடசாலையின் வகுப்பில் பொருத்தப்பாடு அடைவதில் உள்ள பிரச்சினைகள். ஈ. சாதாரண உளவியல் குறைபாடுகள். உ. பொருளாதார கஷ்டங்கள். ஊ. அதி தொழிற்பாட்டு நடத்தைää அழித்தல் சார் நடத்தைää சமூகத்திலிருந்து பின்வாங்கல் போன்ற சாதகமற்ற நடத்தை.
இடைநிலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலின் அவசியம்:
1.         விருத்திசார் தேவை 2. தடுத்தல் சார் தேவை 3. பிரச்சினைகளை உதவ வேண்டிய தேவை.
இடைநிலை மாணவர்கள் எதிர்நோக்கும் கற்றல் தொடர்பான பிரச்சினைகள் : 1. பாடத்தில் கவனம் செலுத்தாமைää 2. கற்றலில் ஆர்வம் குறைவு 3. கற்றவர்களை நினைவிருத்திக் கொள்வதில் கஷ்டம். பாடப்பிரிவை தெரிவு செய்வதில் கஷ்டம். 4. எழுதல்ää வாசிப்பதில் கஷ்டம்ää 5.பாடசாலைச் செல்ல சோம்பல் பரீட்சை பதட்டம்.
விருத்திசார் தேவையில் கற்றல் பிரச்;சினைகளுக்குத் தீர்வுகாண ஆலோசனை வழங்குவதுடன் சகமாணவருடன் இடை வினைத்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் தொழில் தேவைபற்றியும் உணர்த்துவது. பொருத்தப்பாடு சம்பந்தமான பிர்சசினைகளான பொருத்தப்பாடு அடையமுடியாமைää சமூக சிலிää அதித பயம்ää போதைப்பொருள் பாவனை போன்றவற்றைத் தடுக்கவும். மாணவர்களுக்கு ஆலோசனை தேவைப்படுகின்றது. மாணவரின் பிரச்சினைகளை எழுமுன் தடுப்பதும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுவதும் இடைநிலைப்பாடசாலையில் அவசியம். 
பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் :
பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கு அடிப்படையாக அமையும் போக்குகள்: அறிவைப் பாதுகாத்து மாணவர்களுக்கு விநியோகிக்கும் மரபு ரீதியான பாடசாலையாக இல்லாமல் அறிவை வளர்ப்பதுடன் அத்தியவசிய திறன்களை விருத்தி செய்யும் இடமாகவும் பாடசாலை தென்படுகிறது. பாடசாலைகள் யதாத்தபூர்வமான தன்மையை மாணவர்களுக்கு வழங்கும் சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும். மாறும உலக நிலைமைகளுக்கு ஏற்ப மனிதன் செயலாற்ற வேண்டும். என்பதற்காக பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கு அடிப்படையாக பின்வரும் போக்குகள் அமைந்துள்ளன. 1. மாணவரின் கல்விசாராத தேவைகளை கவனித்திற்கொள்ளல் : பாடசாலைகளில் கற்பித்தலைத்தவிர வேறு சேவைகளும் வழங்க வேண்டும் என வலுயுறுத்தி விசேடமாக முழுமையான ஆளுமை வளர்ச்சிக்காக அறிவு வளர்ச்சியைப் போல உடலியல்ää மனவெழுச்சிää சமூக வளர்ச்சி அடைய வேண்டுமென ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மாணவனின் வயது வளர்ச்சியடையும் போது அவன் பல்வேறு பிர்ச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு அடுத்தவரின் உதவி அவருக்கு தேவைப்படுகின்றது. அத்தகைய எல்லா சந்தர்ப்பங்களிலும் பகுப்பாசிரியரோ பெற்றோரோ உதவமுடியாது. ஒரு பிள்ளைக்கு வகுப்பறைக்கற்றலில் கூட வகுப்பறை சாரா புறக்காரணிகளுடன் பிரச்சினையாகின்றன. இத்தடைகளைத்தவிர்த்து சமநிலை ஆளுமையை விருத்தி செய்ய இது தேவைப்படுகின்றது. எனவேää மாணவரின் கல்விசாரா தேவைகளை முக்கியமாகக் கருதும் தற்காலப் போக்கு இச்சேவை கட்டியெழுப்புவதற்கான பிரதான காரணியாகும். 2. வயதுவந்தோராக சமூகத்தில் அங்கத்தவராவற்கு ஆயத்தம் செய்தல் : மாணவரின் உள்ளார்ந்த திறன்களை விருத்தி செய்வதே கல்வியின்  நோக்கமாகும். பிள்ளைகளால் கிரகித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு அறிவை வழங்குவதுடன் வளர்ந்தோர் பருவ வாழ்க்கைக்குத் தேவையான ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைத் தேவைகளையும் மாணவரில் விருத்தி செய்தல் வேண்டும். முதிர்ச்சி அடைந்திராத மாணவன் ஒருவனை தன்னில் தானே தங்கி வாழும் பொருப்புள்ள ஒருவனாக மாற்றுவது பாடசாலையின் கடமையாகும். இதனால் ஒவ்வொரு தனிப்பிள்ளையையும் இலக்குவைத்து பாடசாலை சேவைகளை வழங்க வேண்டியுள்ளது. சமூகத்தின் முன்னேற்றம் அதன் எல்லா அங்கத்தவர்களினதும் தங்கியுள்ளது. அதே போல் சமூகத்தின் சட்டதிட்டங்கள் நியமங்களுக்கு உட்பட்டு வாழ்வதை சமூகம் எதிர்பார்க்கிறது. இதனால்ää சமூகத்தின் கோரிக்கைகளுக்கும் சுயபூரணத்துவம் அடைவதற்கான தேவையின் காரணமாக எழும் தனியாளின் கோரிக்கைக்களுக்குமிடையில் மோதல் ஏற்படுகின்றது. இவற்றிக்கிடையில் சமனிலையைப் பேணுதல் பாடசாலையின் பணியாகும். எனவே வளர்ந்தோர் சமூகத்தின் அங்கத்தவராக மாணவரை ஆயத்தம் செய்தல் என்ற பணியை மேற்கொள்ள ஆலோசனை அவசியம்.3. மனித தொடர்புகளை வளப்படுத்தும் ஒரு சூழலை பாடசாலை உருவாக்கும். : தனிநபர்ää சமூக அபிவிருத்திகளில் மனிதத் தொடர்பும் மிகமுக்கியமாகும். எந்தவொரு மனிதனும் தனித்து வாழ முடியாது என்பதால் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு சூழலில் அங்கத்தவராக இருக்க வேண்டியுள்ளது. குழுவில் வாழ்தல் புது அனுபவமல்ல. ஒருவர் குடும்பம் குழுவில் அங்கத்தவனாகப் பிறக்கிறான். பின் பாடசாலைää சமுhதாயம் போன்றவற்றின் அங்கத்தவராகிறான். குழுவின் வெற்றிகரமான அங்கத்தவராக வாழ இயல்பான ஆர்வம் மட்டுமன்றி வீடுää முன்பாடசாலைää முறைசார் பாடசாலை போன்றவற்றில் பெறும் அறிவும் உள்ளது. ஒரு குழுவின் வெற்றிகரமான தொடர்பைப் பேணுவது எல்லாப்பிள்ளைகளுக்கும் முடியாது. இன்னொரு பிள்ளைக்கு கடினமானதாகவும் காணப்படும். இதற்குக் காரணம் அப்பிள்ளையின் கடந்த கால தொடர்புகள்ää ஊர் நம்புவான்   எனவேää பிள்ளையை இவ்வாறு சூழலிருந்து விடுவித்து அவர்களை சமுகத்தில் விரும்பக்கூடிய பிரஜையாக மாற்றுவதற்கு பாடசாலையில் நல்ல மனிதத் தொடர்புகள் விருத்தியடைக்கூடிய சூழலை உருவாக்குவது அதன் அடிப்படைப் பணியாகும்.  
இப்பாடசாலை வழிகாட்டல் ஆலோசனையுடன் தொடர்புடைய வழிகாட்டல்கள்:  1. வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும். : இச்சேவை தமது நோக்கங்களை அடைந்து கொள்ள ஆரம்பப்பாடசாலை இடைநிலை அதற்குகப்பாலன ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். ஒரு கட்ட மாணவர் முன்னேற்றம் அதற்கு முந்திய கட்டத்தில் பெற்ற உடல்ää உளää உளவியக்க முதிர்ச்சியின் அடிப்படையில்ää சமூகவிருத்தியிலும் தங்கியுள்ளதால் வழிகாட்டல் ஆலோசனை படிமுறை ஒழுங்கில் உருவாக்கப்பட வேண்டும். அப்போது ஆரம்ப நிலையிலிருந்து சிரேஷ்ட நிலைநிலைவரை தொடர்ச்சியாக உதவியைப் பெற இயல்பாகவே பழகிக்கொள்வர். இது பிள்ளையின் விருத்தி தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும். அத்துடன் பெற்றோரின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப ஆதாரமாக அமையும். 2. இச்சேவை நெகழ்ச்சியானதாக இருக்க வேண்டும் : மாணவரின் தேவைகள் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு வேறுபடும். பாடசாலைக்கு பாடசாலை பிரதேசத்திற்குää பிரதேசம் மாணவரிடையே வேறுபாடு காணப்படும். அவ்வாறேää பாடசாலை சமூக அமைப்புää பௌதீக சமூக வளங்கள் கற்றல்ää கற்பித்தல் தன்மை பெற்றோர் நிலை  முதலிய வேறுபடும். எனவேää அந்நந்த பாடசாலைக்கும் மாணவர் தேவைக்கும் பொருத்தமான விதத்தில் இச்சேவை நெகிழ்ச்சியுடைதாக இருக்க வேண்டும். பிள்ளையின் விருத்திக்கட்டத்தை கவனித்து அதற்கேற்ற வித்தத்தில் நுட்ப முறைகளை பயன்படுத்த இது நெகிழ்ச்சியுடையதாக இருக்க வேண்டும். 3. இச்சேவை ஒரு கற்றல் செயல்முறையாக இருக்க வேண்டும் : ஆலோசனை செயல்முறை மூலம் கற்பவற்றில் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கு மட்டும் பொருந்துவனவாகவும்ää அநேகமானவை பொதுவாகவும் பயன்படும். (உ-ம்) குறித்த பாடநெறியைக் கற்பதற்கு முக்கியமான சவால்களும்ääவிருப்புக்களும் திறன்களும் எவை தெரிந்து கொண்டு மாணவன் அவ்வறிவை எதிர்காலத் தொழில் திட்டமிடலுக்கு பயன்படுத்துவான்.
பாடசாலையின் நண்பன்ää நண்பிகளை பெற்றுக் கொள்ள சிரமப்படும் மாணவர் அந்நிலையிலிருந்து விடுபட தமது ஆளுமைக் குறைபாடுகளை கண்டு கொள்ள வேண்டும். அத்துடன் சிறந்த சமூகத்தொடர்புகளை ஏற்படுத்தத் தேவையான திறன்களையும் விருத்தி செய்ய வேண்டும். இது தொடர்பில் பாடசாலை ஆலோசனை மூலம் பெற்ற வளர்ந்தோர் பிற்காலத்தில் சமூகத்தில் வாழத் தேவையான அறிவை பெற்றுக்கொடுக்கிறது. எனவேää ஆலோசனையானது ஒரு கற்றல் செயல்முறையாகத் தேவையான சூழலை இச்சேவை கட்டியெழுப்ப வேண்டும். இப்பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் திறன்களை விருத்தி செய்யக்கூடிய கற்றல் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். 4. எல்லா முயற்சிகளும் ஒருங்கிணைந்தாக இருக்க வேண்டும் : ஆசிரியர் குழாத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் தன் திறமைக்கு ஏற்ப இச்சேவைக்கு பங்களிப்புச் செய்ய முடியும். இதில் பங்குபற்றும் அனைவரினதும் நடவடிக்கைகளுக்கிடையில் ஓர் இணைப்பு இருக்க வேண்டியது அவசியம். இதன்படி இச்சேவையானது இயன்றளவு எளிமையானதாக ஒழுங்கமைக்க வேண்டும். நிர்ப்பந்திக்கப்பட்ட குறிக்கோளின் படி சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். பல்வேறுவகையான பணிகளை பல்வேறு நபர்களிடம் ஒப்படைக்கும் போது அதைக் கையாளக்கூடிய திறன் உள்ளதா என்பதை அடிப்படையாகக் கொண்டு செய்ய வேண்டும். அச்சேவைக்கு பொருப்புடைய அனைவரும் நேரடியாகவோää மறைமுகவாகவோ அதற்குப்பங்களிக்க வேண்டும். 5. இச்சேவை பாடசாலைச் சூழலுடன் இடைத்தொடர்புள்ள அங்கமாக இருக்க வேண்டும : இச்சேவையின் குறிக்கோள்களும் செயற்பாடுகளும் பாடசாலை ஒழுங்கமைப்பின் குறிக்கோள் செயற்பாடுகளுடன் இணைந்திருக்க வேண்டும். தேசிய குறிக்கோள் அடிப்படையில் பாடசாலை குறிக்கோளுடன் தீர்மானிக்கப்பட்டது. எனினும்ää பாடசாலை அமைவு பிரதேசத்ததை அன்டிய தேவைகளும் பாடசாலையை குறிப்பைப்பாதிக்கும் எனவேää பாடசாலை குறிக்கோளின் செல்வாக்குச் செலுத்தும் பிரதேசத் தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பாடசாலை வழிகாட்டல்ää ஆலோசனை வழங்கல் சேவையின் ஒழுங்கமைப்பு:
இச்சேவையை வெற்றிகரமாக நடாத்த பாடசாiயில் உள்ள வசதிää சூழ்நிலைää பிள்ளைகளின் தேவைகள் என்பவற்றைக்கருத்தில் கொண்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். வௌ;வேறு நாடுகளில் இச்சேவை பின்வரும் முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 1. ஒன்றிணைக்கப்பட்ட(மையநாட்ட முறை) : இது கூட்டு மொத்தமாக கேந்திர மையப்படுத்தப்பட்டு செயற்படுகின்றது. இச்சேவையுடன் தொடர்பான எல்லா விசேட சேவைகளும் இம்மத்திய நிலையத்தினால் செயற்படுத்தப்படுகின்றது. இங்குää எல்லா மாணவருக்கு சேவை வழங்க முடியாது. சேவை ஒழுங்கு முறைமைää பின்னூட்டல் மூலம் சேவையை அபிவிருத்தி செய்ய முடிதல். போன்ற காரணங்களால் மிகவினைத்திறன் ஆனது. எனினும்ää ஒன்றிணைக்கப்பட்ட தன்மையால்ää பாடசாலையின் எல்லா ஆசிரியர்களும் பங்குபற்ற முடியாதுää நடாத்துவதற்கு கூடுதலான செலவு ஏற்படும்.  2. பரலாக்கப்பட்ட (மைநீக்க முறை):இச்சேவையின் பொருப்பு பாடசாலை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணைப்பாக்கம்ää அதிபர்ஃபிரதி அதிபர் பெரும்பாலும் பயிற்சி பெற்ற ஆசிரியரே நியமிக்கப்படுவர். எல்லா ஆசிரியர்களும் பங்குபற்ற முடிந்தாலும்ää விசேட சேவை ஒன்று இல்iலாம இதன் குறைபாடு ஆகும். இணைப்பாக்கமும்ää நிறுவாகமும்ää வினைத்திறனானது. எனக்கூற முடியாது. கல்விக்காக ஒதுக்கப்பட்ட காலத்தில் ஒரு பகுதி இச்சேவைக்கு ஒதுக்கப்படுவதால் இச்சேவை காரணமாக செலவு அதிகமானது.   3. ஒன்றிணைக்கப்பட்டதும்ää பரவாக்கப்பட்டதும் ஆகிய பன்புகள் கலந்த ஒருங்கிணைந்த முறைää எல்லா நல்ல அம்சங்களும் இதில் அடங்கும்ää எனினும்ää குறைபாடுகள் : 1. ஒரு பாடசாலையில் சேவையிலுள்ள நிபுணர்களின் எண்ணிக்கை போதாது. 2. வழிகாட்டல் ஆலோசனை கூறல் சம்பந்தமான போதியறிவு ஆசிரியருக்கு இல்லாமை. 3. ஒவ்வொருவருடைய பொருப்புக்களையும்ää வௌ;வேறாக இனம்கண்டு அவர்களது பொறுப்புக்களை செயற்படுத்த முடியாமை. இச்சேவை பாடசாலை கல்வி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகும் போதுää மாணவருக்கு விலைமதிப்பற்ற சேவையாக அமையும். 
பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் சேவையுடன் தொடர்பான அடிப்படைச் செயல்முறைகள் : தனித்துவமான இடம் பா. ஆலோசகருக்கு உரியது.- இச் சேவையின் அடிப்படைச் செயல்முறைகள் 1. தகவல்கள் அட்டவணைப்படுத்தும் செயன்முறை : இது தனியாள் மதிப்பீட்டுச் சேவையாகும். இதில் தனியாளைப்பற்றிய தகவல்கள் பதியப்பட்டிருக்கும். (உ-ம்) வரவறிக்கைää சோதனைப்புள்ளிகள்ää ஆளுமைப்பண்புகள். ஒரு ஆலோசனைக்கான தேவை ஏற்படும் போது மாணவரைப்பற்றிய தகவல்களை இவ்வட்டவணையிலிருந்து பெறலாம். இதன் மூலம் தகவல்களை திரட்டுவதும்ää வகுப்பாய்தல்ää தொகுத்தல்ää பதிதல் தகவல்களை அறிக்கைப்படுத்தல்ää இரகசியம் பேணல் என்பன அவசியம்.
2.தகவல்களை வழங்கும் செயல்முறை: மாணவருக்கு வினைத்தறனான சேவையை வழங்க இது முக்கியம்ää பின்வரும் சந்தர்ப்பங்களில் மாணவர் பற்றிய தகவல்கள் தேவைää 1. ஒரு மாணவனை புதிய பாடசாலைக்குஃ வகுப்பிற்கு அனுப்பும் போதுää 2. தொழிலைத் திட்டமிடும் போதுää 3. சொந்தப்சமூகப்பிரச்சினை ஒன்றுக்கு முகம் கொடுக்கும் போது. இச்சந்தரப்பங்களில் பின்வரும் தகவல்கள் தேவைப்படும். மாணவனின் ஆளுமைப்பண்புகள்ää திறமைகள்ää பலவீனங்கள்ää கல்வி சந்தரப்பங்கள்ää வேலை உலகுபற்றிய தகவலகள் ஆரோக்கியம் எதிர்பாலார் தொடர்புகள்ää சமூகப்பொருத்தப்பாடு. இத்தகவல்கள் திறள்பதிவேடுகளாக பேணப்படுவதோடு இற்றைப்படுத்தப்படவும் வேண்டும்.
3. உரிய இடத்தில் அமர்த்தும் செயற்பாடு:  மாணவரின் முழுவளர்ச்சிக்கு உதவும்ää இறுதிக்குறிக்கோளை அடைய அவசியம். இரண்டு வகைப்படும். அ. பாடசாலை உள்ளே உரிய இடத்தில் அமர்த்துதல்ää : ஒவ்வொரு பிள்ளையினதும் கல்விää உளவிருத்தி மட்டத்தை கருத்தில் கொண்டு பிள்ளையை மையமாகக் கொண்டு செயற்படும் முறை பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ப சில பாடங்களுக்கு வகுப்புக்களுக்கு ஒழுங்கு செய்தல். உயர்மட்டம் சாதாரணம்ää கீழ்மட்டம் என மாணவர் திறமைக்கேற்ப குழுக்களாக்குதல். ஆ. பாடசாலைக்கு வெளியே உரிய இடத்தில் அமர்த்துதல்: மாணவர்களுக்கு முழுநேர பகுதி நேர தொழிலைப் பெற உதவுதல்ää இது இலங்கையில் இல்லை. 4. பின்தொடர் நடவடிக்கை செயல்முறை : மாணவன் பாடசாலையில் கழிக்கும் முழுக்காலத்திலும் அவனது முன்னேற்றம்ää பின்னடைவு தொடர்பான தகவல்களைத் திரட்டி ஆசிரியர்களுக்கும் ஆலோசகர்களுக்கு அத்தகவல்களைப் பெற்றுக்கொடுத்தல். பாடசாலையில் வெளியேறி சமூகத்தில் சேர்ந்த பின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் இச்செயன்முறையின் மூலம் நடைபெறுகிறது. இது பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் மாணவனுக்கு உதவுகிறது. தொழிலுக்கான தேர்ச்சியைப்பெற்றுக் கொடுத்தல்ää தொழில் முன்னேற்றத்திற்கு உதவுதல் போன்றவைகளும் இருக்கும்.

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனையில் பாடசாலை அதிபரின் வகிபங்குகளும்ää பொறுப்புக்களும்.
1.         தலைமைத்துவம் 2. செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்ää 3. வளங்களைத் தேடுதலும்ää வழங்குதலும் 4. சேவை தொடர்பான தீரமானம் எடுத்தல் 5. செயற்பாடுகளைத் திட்டமிடுதல்ää 6. இச்சேவைபற்றி மாணவர்ää ஆசிரியர் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
ஆசிரியரின் பொறுப்புக்கள் : 1. திட்டமிடுபவர்ää 2. ஓழுங்கமைப்பவர்ää 3. ஆலோசனை வழங்குபவர் 4. கனிப்பீடு செய்பவர் 5. வழிகாட்டுபவர் 6. நெறிப்படுத்துபவர் 7. தலையீடு செய்பவர்
ஆலோசகரின் கடமைகள் : 1. ஆலோசனை தேவைப்படும் மாணவனை இனங்காணல் 2. அம்மாணவன் பற்றிய விபரங்களை சேகரித்தல் 3. ஆலோசனை வழங்கல்ää 4. பதிவேடுகளை பேணல். 5. அதிபர்ää பிற ஆசிரியர்ää பெற்றோர்ää வெளியிலுள்ள வாண்மையாளர்கள் என்போரிடையே தொடர்பைப் பேணல்.
இலங்கை ஆலோசனை சேவையின் வரலாறு : 1957ல் அறிமுகப்படுத்த முயற்சிக்கப்பட்டது. 1957ல் வெளியான 10ம் சுற்றறிக்கையில் கல்விப்பணிப்பாளர் வழிகாட்டல் நிகழ்ச்சியின் பொதுவான அமைப்புப் பற்றிய விபரங்களை வெளியிட்டார். பாடசாலை ஆலோசனைத்திட்டம் தொழில்சார் வழிகாட்டாலாக இருந்துடன் அமெரிக்க தொழில்வழிகாட்டல் சேவைக்கு அமைய காணப்பட்டது. 1970ல் இச்சேவை ஸ்தம்பிதம்ää 1980வரை பாடசாலை ஆலோசனைச் சேவை நடந்தமைக்கான சான்றுகள் இல்லை. 1983ல் ஜூலையில் கல்வி அமைச்சின் மதிப்பீட்டு வழிகாட்டல் ஆய்வுப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆலோசனை சேவை இப்பிரிவினால் மேற்கொள்ளப்படவிருந்தது. பின் Nஐநு ஒப்படைக்கப்பட்டது. போதிய நிதிவசதி அமைச்சிடம் இருக்கவில்லை அதனால் தேசிய இளைஞர் மன்றத்துடன் இணைக்கப்பட்டது. 1983ல் யவுன் மித்ரோ ஆலோசனை நிகழ்ச்சித்திட்டத்துடன் இலங்கையில் முiயான சேவை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைகழகத்தில் கல்வி உளவியல் துறைää மருத்துவத்துறைää தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. முதலாவது ஆலோசனை சேவை கொள்ளுப்பிட்டி மஹானாம வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின் பண்டாரவளைää கண்டிää காளிää இரத்திரனபுரி என்பவற்றிக்கு விஷ்தரிக்கப்பட்டது. 1994ன் பின் இச்சேவை நிலையங்கள் மூடப்பட்டன. பின் அரசார்பற்ற நிறுவனங்கள்ää மாதர் உதவி சேவை குடும்பப் புனருத்தாபன மத்திய நிலையம்ää குடுப்பக்கட்டுப்பாட்டுச் சங்கத்தின் (ஆலோக்கையா) போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. பின் தனியார் துறையும் இதனை ஆரம்பித்தது. 1யுடீஇ 1ஊஇ 300 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகளில் - முழுநேர ஆலோசகர். 1யுடீஇ 1ஊஇ 300 குறைந்த மாணவர்களுக்கு  - பகுதிநேர ஆலோசகர்.

இலங்கையில் பாடசாலை முறைமைக்கு வெளியில் சேவையிலுள்ள ஆலோசனை சேவைகள் : 1. ஆலோக்காய. இலங்கை குடும்பக்கட்டுப்பாட்டுச் சங்சம் நிறுவியதுää பாலியல் பிரச்சினைää இனவிருத்தி தொடர்பான சுகாதார பிரச்சினைகளுக்குää இளைஞர்ää மனமுடித்த பெற்றோருக்கு வழிகாட்டியது. ர்ஐஏ எயிட்ஸ் நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கியது. ஆலோசகர்களுக்கு பயிற்சியளித்தல் 2.சிதுமின் - பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு உலகலாவிய மனித பிரச்சினைகளை தீர்க்க முற்படுகிறது. தேசிய மட்டத்தில் சேவைகளை வழங்கிறது. சிறுவர் துஷ்பிரயோகம்ää விபச்சாரம்ää பாலியல் துஷ்பிரயோகம்ää தொடர்பான சேவைகளை வழங்குகிறது. பௌத்தää இந்து சமயத்தலைவர்களுக்கு பயிற்சி வழங்குகிறது. பாடசாலை ஆலோசகருக்கு பயிற்சி வழங்குகிறது. 3.மாதர் உதவி சேவை:  1987ல் உருவானதுää சமூக சேவைத்திணைக்களத்தில் பதியப்பட்டது. எல்லாக் குடும்பப்பிரச்சினைக்கும் தீர்வுகாணப்பட்டது. வன்முறைக்குட்பட்ட பெண்கள் பிள்ளைகளுக்கு உதவி வழங்கல் இதன் நோக்கம். கற்பழிப்புää குடும்ப வன்முறைää பாலியல் துஷ்பிரயோகம்ää பாதிக்கப்படுவோருக்கு ஆலோசனையும் சட்ட உதவும் வழங்கல். 4. பிள்ளைகளின் பாலியல் துஷ்பிரயோகம்ää சுரண்டல்ää விபச்சாரம்ää என்பவற்றை நிர்மூலமாக்கும் நிறுவனம் (நுளுஊயுPநு) 1985ல் தாபிக்கப்பட்டது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பிள்ளைகளுக்கு சிகிச்சையளித்தல்ää மும்மொழிகளிலும் விழிப்புணர்வு திட்டங்களை நடாத்துதல். பிள்ளைகள் மத்தியில் வேலை செய்யும் அரசää அரச சார்பற்ற ஊழியர்களுக்கு பயிற்சியளித்தல். உளவியல் பரிகாரச் சிகிச்சையும் ஆலோசனை சேவையும் வழங்குதல். 5. உளவியல்சார் கற்கை நிறுவனங்கள் - 1983ல் கொழும்ப சச்சவிய ஜோன் கெயார் நினைவு ஆலோசனை நிலையத்தில் இயங்குகிறது உளலவியல்ää கல்விää குடும்ப ஆலோசனை வழங்குகிறது. 

ஆலோசனை அணுகுமுறைகள்: 1. உளப்பகுப்பாய்வுக் கொள்கை அணுகுமுறை- இதன் முன்னோடி கிக்மென் பிறைட் கொள்கை சார்ந்த மற்ற உளவியலாளர் அட்லர்ää அலெக்சாண்டர்ää கோணிää கார்யுங்போடிங். ஒருவரின் நனவு மனதை விட நனவிலி மனம் மிகுந்த சக்திவாய்ந்த. நனவிலி ஒருவரின் ஊக்கல்ää நடத்தை ஆகியவற்றுக்கு மூல காரணமானது. என்பதை வலுயுறுத்துகிறது. தீவிர வெறுப்புகள்ää பயங்கள்ää பாலியல் தேவைகள் யாவும் நனவிலிக்கு தள்ளப்பட்டு ஒடுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒடுக்கப்பட்டவை ஒருவரின் எதிர்காலத்தில் நடத்தைப்பிரள்வுகள் உளக்கோலாறுகள் ஆகியவற்றிக்கு மூலகாரணம் என்று கூறுவார்.
உளபகுப்பாய்வு ஆலோசனை நுட்பம் : இது உளமருத்துவர்களாலும்ää உளப்பரிகாரிகளாலும்ää பெருமளவு பயனபடுத்தப்படுகின்றது. தீவிர நரம்புக்கோலாறைää உளக்கோலாரைத்தீர்க்க உதவுகிறது. பாடசாலை ஆலோசனை சேவைக்கு பொருத்தமற்றது.   

  
  

Sunday, August 22, 2010

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அப்துல் மஜீது உமரீ
அல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!
பொதுவாக மக்கள் புதிதாக எதையேனும் துவங்கும்போது மங்களகரமான சில சடங்குகளைச் செய்வதை ஐதீகமாகக் கருதுகின்றனர். சிலர் அதன் மூலம் அக்காரியம் புனிதக் காரியமாக பரிணாமம் பெறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.
இன்னும் பலரது நோக்கம் பக்திப் பரவசத்திற்கும் புனிதத்திற்கும் அப்பால் விரிகின்றது. அதாவது, துவங்குகின்ற காரியம் கைகூட வேண்டும், இலாபகரமாக அமைய வேண்டும், சுபமாக நிறைவுற வேண்டும், அபிவிருத்தி ஏற்பட வேண்டும், ஆனந்தமாக அமைய வேண்டும், இலக்குகளை அடைய வேண்டும் என்பன போன்ற ஆயிரமாயிரம் நோக்கங்கள் இந்த ஐதீகத்தின் பின்னால் இருக்கின்றன.
இந்த எதிர்பார்ப்புகளைச் சார்ந்த சடங்குகள் மதங்களையும் மொழிகளையும் நாடுகளையும் தாண்டி ஒருமைப்பட்டுக் கிடக்கின்றன. வார்த்தைகளும் அடையா ளங்களும் வேண்டுமானால் வேறுபடலாம். பிள்ளையார் சுழி (உ), சிலுவை, சங்கு, சக்கரம், லிங்கம், 786, பிறை-நட்சத்திரம் போன்ற நூற்றுக் கணக்கான வடிவங்கள் புழக்கத்தில் உள்ளன. இவ்வடிவங்களின் மூலமே இவற்றை உபயோகப் படுத்துபவர்கள் யாவர், எம்மொழியினர், எந்நாட்டைச் சார்ந்தவர் என்பவற்றையெல்லாம் பெரும்பாலும் அனுமானித்துவிடலாம்.
இந்த வழக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவரிடம் மட்டும்தான் உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இதில் புனிதமிருப்பதாக நாங்கள் கருதுவதில்லை என்று அவர்கள் கூறிக்கொண்டாலும் தங்களது கொள்கையை எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்துவதற்காக இவ்வழக்கத்தைக் கையாளுகின்றனர். அதாவது சங்கம், இயக்கம், கட்சி, நிறுவனம், அமைப்பு என இவர்களும் சில அடையாளங்களை அல்லது சுலோகங்களைப் பயன் படுத்துகின்றனர்.
அத்தனை எல்லைகளையும் தாண்டி எல்லோரிடமும் இந்தப் பழக்கம் பரவியிருப்பதற்குக் காரணம் 'துவக்கம்' என்ற சந்தர்ப்பத்திற்கு இருக்கின்ற மகத்துவம்தான். 'முதல்கோணல் முற்றிலும் கோணல்', 'THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION' போன்ற பழமொழிகளும் இதiயே பிரதிபலிக்கின்றன.
இந்த வழக்கத்தில் இஸ்லாத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் குறிக்கோள்.எதையும் ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் இடம்பெற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதலாகும். திருமறை குர்ஆனுடைய துவக்கமே இதன் மூலம்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதே இதற்குப் போதுமான சான்றாகும். அதாவது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஹிரா என்னும் குகையிலே தனித்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) என்னும் வானவர் வந்து, இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் என்று கூறினார். படைத்த உமது இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! (பார்க்க அல்குர்ஆன்: 96:1)
இந்தச் சமுதாயத்தின் பிரச்சினை ளுக்குத் தீர்வாகவும் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்தறிவிக்கக்கூடிய உறைகல்லாகவும், முக்காலச் செய்திகளையும் பொதிந்து வைத்துள்ள பொக்கிஷமாகவும் விளங்குகின்ற இறைமறையாம் திருக்குர்ஆனின் ஆரம்ப வசனமே அது.
அது இறைமறையின் ஆரம்ப வசனம் மட்டுமல்ல, அதுதான் முஹம்மத் என்ற தனி நபரை மனித சமுதாயத்தின் மாபெரும் வழிகாட்டியாக இறைவனின் தூதராக அங்கீகரிக்கிறது. இந்த உம்மத்திற்கான புதிய ஷரீஅத் (சட்டதிட்டத்)தின் தோற்றுவாயே அதுதான். அதன் துவக்கமே 'இறைவனின் பெயரால்...' என்று அமைந்திருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக 'ஓதுவீராக!' என்ற கூற்றின் மூலம் அவ்வாறுதான் துவங்க வேண்டும் என்று கட்டளையிடவும் செய்கிறது அந்த வசனம்.
எதையும் செய்ய ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் - இறைவனின் நாமத்தால் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இந்த வசனம் நமக்கு வலியுறுத்துகின்றது. அவ்வாறு வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் சிலவற்றை இங்குக் காணலாம்.
படிப்பதற்கு முன்:
மேற்காணும் 96:1-ஆம் வசனம் எதையும் படிக்கும்போது இறைநாமம் கூற வேண்டும் என்று கட்டளையிடுகின்றது அதுபோக, குர்ஆனின் (தவ்பா 9-ஆம் அத்தியாயத்தைத் தவிர) எல்லா அத்தியாயங்களின் ஆரம்பத்திலும் பிஸ்மில்லாஹ் இடம் பெற்றுள்ளது.
எழுதுவதற்கு முன்:
ஸபா நாட்டு அரசிக்கு சுலைமான் (அலை) அவர்கள் எழுதிய கடிதத்தின் தொடக்கம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்று அமைந்திருந்தது. (அல்குர்ஆன்: 27:30)
நபி (ஸல்) அவர்கள் ரோமானியப் பேரரசர் ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இருந்தது என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி புகாரீ - முஸ்லிமில் உள்ளது.
உயிர்ப்பிராணிகளை அறுக்கும்போது:
நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட (அறுக்கப் பட்ட மாமிசத்த)தையே புசியுங்கள்! (6:118)
நபி (ஸல்) அவர்கள் உள்ஹிய்யா கொடுக்கும்போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுத்தார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ - முஸ்லிம்)
உழூ செய்வதற்கு முன்:
'பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள்!' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் உள்ளது.
உண்பதற்கு முன்:
பிஸ்மில்லாஹ் கூறி உனது வலது கையால் உண்பாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ரிப்னு அபூ ஸலமா (ரழி) அறிவிக்கும் தகவல் புகாரீ - முஸ்லிமில் உள்ளது.
உண்ணும்போது பில்மில்லாஹ் கூற மறந்துவிட்டால் பிறகு பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதீ, அபூ தாவூதில் உள்ளது.
உறங்குவதற்கு முன்:
நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கும்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா (அல்லாஹ்வே! உனது நாமத்தால்..) என்று கூறுவார்கள் என ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரீ)
வாகனத்தில் ஏறும்போது:
நபி (ஸல்) வாகனம் கொண்டு வரப்பட்டதும் அதில் ஏறும்போது அதில் காலை வைத்ததும் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள் என அலீ (ரழி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்)
ஓதிப்பார்க்கும்போது:
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! நீங்கள் சிரமப்படுகிறீர்களா?' பிஸ்மில்லாஹி அர்கீக்க (அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கின்றேன்)... என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி), நூல்: முஸ்லிம்.
யாருக்கேனும் காயமோ புண்ணோ இருந்து அதனால் சிரமம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் தமது விரலால் (சைகை செய்தவர்களாக) பிஸ்மில்லாஹி... என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரீ - முஸ்லிமில் உள்ளது.
தமக்கு உடலில் வேதனை ஏற்பட்டு அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தாம் முறையிட்டபோது அன்னார், 'உமது கையை உமது உடம்பின் வேதனையுள்ள பகுதியில் வைத்து மூன்றுமுறை பிஸ்மில்லாஹ் ... கூறுவீராக!' எனத் தம்மிடம் கூறியதாக உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் உள்ளது.
உடலுறவுக்குமுன்:
உங்களில் யாரும் தமது மனைவியிடம் உறவுகொள்ள நாடினால் பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ்ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா என்று ஓதிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ - முஸ்லிம்)

வீட்டிலிருந்து புறப்படும்போது:
ஒருவர் தமது வீட்டிலிருந்து புறப்படும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்று ஓதினால்.. என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூ தாவூத், திர்மிதீ)
வீட்டில் நுழையும்போது:
ஒருவர் தமது வீட்டில் நுழைந்ததும் ..பிஸ்மில்லாஹி வலஜ்னா.. என்று ஓதட்டும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரழி), நூல்: அபூ தாவூத்.
இப்படிப் பல காரியங்களையும் துவங்கும்போது பிஸ்மில்லாஹ் கூறுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுவதால் நாம் பிஸ்மில்லாஹ் கூறும் வணக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
இனி பிஸ்மில்லாஹ்வின் - இறை நாமத்தின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்வதானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிடுகிறார்கள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்.. அவன் எத்தகையவன் எனில், அவனுடைய பெயர் (நினைவுகூரப்பட்டு) இருக்கும்போது இந்தப் பூமியிலோ வானங்களிலோ உள்ள எதுவும் (எந்தத்) தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அவனோ நன்கு செவியேற்பவனாகவும் மாபெரும் அறிஞனாகவும் இருக்கிறான். (அபூதாவூத், திர்மிதீ)
நீங்கள் இரவின் ஆரம்ப நேரத்தை அடைந்துவிட்டால் உங்களது குழந்தைகளை வெளியில் செல்லவிடாமல் தடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அப்போதுதான் ஷத்தான் பரவுகின்றான். சற்று நேரம் கடந்தபின் அவர்களை விடுங்கள். வாயில்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க! தோல் பைகளின் வாயைக் கட்டி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!... பாத்திரங்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!
உங்களில் ஒருவருக்குப் பாத்திரத்தின் மீது வைப்பதற்கு ஒரு குச்சியைத் தவிர வேறு மூடி எதுவும் கிடைக்கவில்லையெனில் அதைப் பாத்திரத்தின்மீது அகலவாக்கில் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறிய தகவல் ஜாபிர் (ரழி) மூலம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
ஷைத்தானின் சேஷ்டைகளிலிருந்து பாதுகாப்புப் பெற இறைநாமம் அரணாக அமையும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறதல்லவா?
உண்மையில் இறைநாமம் கூறப்படுவதால் உலகின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, பல நன்மைகளையும் பெறலாம். அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பெற்ற நன்மைகளுக்குப் பல சான்றுகள் உள்ளன.
அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படாத உணவை ஷைத்தான் தனதாக்கிக் கொள்கின்றான் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரழி), நூல்: முஸ்லிம். அதாவது பிஸ்மில்லாஹ் கூறினால் அதில் பரக்கத் ஏற்படும். இல்லையாயின் அதில் அபிவிருத்தி இல்லாமற் போய்விடும்.
குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் தமது கையை வைத்துக்கொண்டு பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். அப்போது தண்ணீர் அன்னாரின் விரல்கள் வழியாக புறப்பட்டு வந்தது. ஏறத்தாழ எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் அதில் உளூ செய்திருக்கிறார்கள் என்ற தகவல் அனஸ் (ரழி) மூலம் நஸயீயில் உள்ளது.
இந்த அற்புதம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடை என்பதைக் கடந்து அந்த அதிசயத்தில் நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைப் பயன்படுத்தி யுள்ளார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.
கைமேல் பலன் கிடைக்கும் இந்த நன்மையைப் பற்றி நமது தாய்மார்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் தொழுகையில்கூட அக்கறையில்லாத பலபெண்கள் உலையில் அரிசியை இடும்போது பிஸ்மில்லாஹ் கூறத் தவறுவதில்லை.
முஸ்லிம்களில் பலர் கடிதங்களில் பிஸ்மில்லாஹ்விற்குப்பகரமாக இலாஹி, 786 போன்றவற்றை எழுதுகின்றனர். இலாஹி என்று எழுதுவதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரங்களைக் காண முடியவில்லை. 786 என்பது 'அப்ஜத்' அரபி எண்ணியல் கணக்குப் பிரகாரம் பிஸ்மில்லாஹ்..வின் கூட்டுத்தொகை என அவர்கள் கருதுகின்றனர். இரு காரணங்களால் இந்த முறையைத் தவிர்க்க வேண்டியதுள்ளது.
 முதலாவது காரணம் நபி (ஸல்) அவர்களில் அங்கீகாரம் இதற்கு இல்லை. அதற்கு மாறாக அன்னார் பல மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதியிருக்கிறார்கள். சுலைமான் (அலை) அவர்களும் வேற்று நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹ்வைக் குறிப்பிட்டிருந்ததைப் பற்றி மேலே கண்டோம். எனவே 786 போன்ற வாசகங்களை எழுதுவதால் ஒரு சுன்னத்தை அகற்றிவிட்டு ஒரு பித்அத்தை அரங்கேற்றிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும். மற்றொரு காரணம், 786 என்ற கூட்டுத் தொகை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு மட்டும் சொந்தமானதல்ல, மாறாக ஹரே கிருஷ்ணா போன்ற இஸ்லாத்திற்கே சம்பந்தமில்லாத வார்த்தைகளுக்கும் கூட இந்த எண்ணிக்கை வரும். ஏன் ஷைத்தான் மற்றும் ஃபிர்அவ்னின் மூலம் ஏற்படும் உதவி(யால்) என்ற கருத்துள்ள அவ்னன் பி ஃபிர்அவ்ன வ பி ஷைத்தான என்ற வாசகத்தின் எண்ணியல் கூட்டுத்தொகையும் 786 வரும்.
எண்ணியல் வழக்கத்தை அங்கீகரிக்கத் துவங்கினால் பல தீய விளைவுகள் ஏற்படும். இப்போதே கூட வாகனம், வீடு, உரிமங்கள் போன்றவற்றின் பதிவு மற்றும் அடையாள எண்களில் 786 வருவதை நல்ல சகுனமாகவும் இப்லீஸ் என்ற வார்த்தையின் கூட்டுத் தொகையான 103-ஐ அபசகுனமாகவும் பலர் கருதுகின்றனர். இன்னொரு இரகசியம் என்ன தெரியுமா? இப்படிப்பட்டவர்களில் பலர் பிஸ்மி என்று மட்டும் தங்கள் நிறுவனங்களுக்கோ உற்பத்திப் பொருட்களுக்கோ பெயர் வைத்துக் கொண்டு ஆனந்தமடைகின்றனர். பிஸ்மி என்பதன் கூட்டுத் தொகையும் 103 தான்.
அரசு, மற்றும் தனியார் நிறுவன பதிவுகளிலும் 786 என்கிற எண் கிடைப்பதற்காக காசு கொடுப்பதற்கு மக்கள் தயாராவதைப் போல எதேச்சையாக 103 கிடைத்து விட்டால் அதை மாற்றுவதற்குப் பணம் செலவழிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
அது மட்டுமல்லாமல் விவரமறியாத பலரும் இந்த எண்ணை ஆபர அணிகலன்களில் பொறித்து மகிழ்வதும் அதற்கு மரியாதை செய்யும் வகையில் அதை முத்திக்கொள்வதும் அதைச் சட்டங்களில் அடக்கி சுவர்களில் மாட்டி அதற்குப் பக்தி முத்திரை குத்தி அதற்கு ஊதுபத்தி ஏற்றுவதும், பூச்சரங்கள் சாற்றுவதும் இன்றைய இஸ்லாமியக் கலாச்சாரமாய் அறிமுகமாகி வருகின்றன.
கலை நிகழ்ச்சிகளிலும் மாற்று மதச் சின்னங்களாக சிலுவை மற்றும் சிலைகளுக்கு நிகராக இந்த 786 தான் இஸ்லாத்தின் சார்பாக இடம் பெறுகின்றது.
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை, கோட்பாடுகளுக்கு மாற்றமான ஷிர்க், பித்அத், பிற சமுதாய கலாச்சாரத்திற்கு ஒப்பாதல் போன்ற தீமைகளை உள்ளடக்கிய இந்த எண்ணியல் வழக்கம் தேவைதானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
பிஸ்மில்லாஹ் எழுதப்பட்டால் அதன் மகத்துவம் தெரியாத சிலர் அதைக் கிழித்தோ அல்லது அசிங்கப்படுத்தியோ அதன் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்துகொள்ளக்கூடும். அதைத் தவிர்க்கவே 786-ஐ நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்று சிலர் காரணம் கூறுகின்றனர். மாற்றுமத அரசர்களுக்குக் கடிதம் எழுதும்போது பிஸ்மில்லாஹ்வை எழுதிய நபி (ஸல்) அவர்களுக்கே ஏற்படாத அக்கறையா பிஸ்மில்லாஹ்வின் புனிதத்தைக் காப்பாற்று வதில் இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது? இன்னும் சொல்லப்போனால் தாம் எழுதியனுப்பிய கடிதத்தைக் கிழித்துப்போட்டு கொச்சைப் படுத்திய பாரசீகநாட்டு மன்னரைச் சபித்த நபி (ஸல்), (பார்க்க: இப்னு அப்பாஸ் (ரழி) புகாரீயில்) இனி பிஸ்மில்லாஹ் எழுதக்கூடாது என்றோ அதற்கு மாற்றாக எண்களைப் பயன்படுத்தவேண்டும் என்றோ கூறியதில்லை.
இதைப்போலவே கடிதத்தின் ஆரம்பத்தில் இலாஹீ என்று எழுதுவதும் முறையல்ல. ஏனெனில் அவ்வாறு எழுதுவதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை.
எனவே எதையும் ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறிக்கொள்ளும் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்வோம். அதன் மூலம் இம்மை - மறுமையின் பேறுகளை அடைவதற்கு உரித்தானவர்களாக நம்மை வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக!
இந்தத் தளத்தின் முதல் கட்டுரையே துவக்கத்தின் ஒழுங்கு பற்றி அமைந்திருப்பதும் மிகப் பொருத்தமாகவே உள்ளது.
பிஸ்மில்லாஹ் கூறாமல் துவங்கப்படும் எந்த நல்ல காரியமும் குறைவுடையதாகவே அமையும் என்ற கருத்தில் இப்னுமாஜா உட்பட பல நூற்களில் வந்துள்ள செய்தி பலவீனமானதாகும். (ஷைக் அல்பானீ (ரஹ்), தமது இர்வாவுல் கலீல் என்னும் நூலில்) இது ஒரு தகவலுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.